Wednesday, January 20, 2010

கிழித்தெரிந்த கவிதைகள்

ஒரு கவிதை எழுத நினைத்து
வார்த்தைச் சேகரிப்பில்
திளைத்திருந்தேன்.

துளிகள் பெருமழையாகவும்
பெருமழை கடலாகவும்
மாறிக்கொண்டேயிருந்தன.

சரிப்பட்டு வராதென
தாள்களில்
சேமிக்கலானேன்.

சாக்கடை நீர்
நனைத்த தாள்களைக்
கிழித்தெரிந்தேன்.

கிழித்தெரிந்த தாள்களில்
மட்டும் எண்ணற்ற
கவிதைகள் கொட்டிக்
கிடந்தன.

1 comment:

Toto said...

அழகா சொல்லியிருக்கீங்க

Toto
Http://Roughnot.blogspot.com