tag:blogger.com,1999:blog-65375652024-03-07T11:22:49.827+05:30CACHE - my cerebrations- கோ.கணேஷின் வலைப்பக்கங்கள்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comBlogger193125tag:blogger.com,1999:blog-6537565.post-72132212476764765852020-01-08T17:50:00.003+05:302020-01-08T17:50:25.513+05:30ஒரு பகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தற்கொலைக்கு தயாராயிருந்தான்<br />
தண்டவாளம், மொட்டை மாடி<br />
வேறேதும் தளவாடம்?<br />
ஒரு துளி விஷம்?<br />
அவனைக் கைகொண்டு<br />
கவனமாக கடக்கச் செய்தேன்.<br />
“நன்றி” என்றான்.<br />
தற்கொலைக்கும் எனக்குமான பகை<br />
அவனைப்போன்ற குழப்பத்தில்தான்<br />
துவங்கியது!</div>
Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-44494330452521674882014-09-19T11:21:00.000+05:302014-09-19T11:21:00.783+05:30மேண்டலின் ஸ்ரீநிவாஸ் அஞ்சலி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #37404e; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அந்தக் காலத்தில் தாத்தா வாங்கச் சொல்லிய ஆடியோ கேசட்டுகளில் முக்கால் வாசி மேண்டலின் ஸ்ரீநிவாஸுடையது தான். மழலை மாறாத அந்த முகம் பதித்த கேசட் கவர் இன்னும் மனதில் நிற்கிறது. பால்யத்திலேயே இசையில் தேர்ந்த இடம் பிடிக்க முடியும் என்பது ஸ்ரீநிவாஸா</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ல் என் மனதில் பதிந்த உண்மை.</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYV5H36VJASM9-UDchevqOBikhX1liDK0o-ND5XhRMLtY0jqbXvP0yxrwmEV6zUagQ-GP4cADyrKeubKn3TKP_KiZJSWCYj-wlmyYQRCvfmngcQ1zIQgiQbfrBUnpNH0an64T/s1600/6223.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZYV5H36VJASM9-UDchevqOBikhX1liDK0o-ND5XhRMLtY0jqbXvP0yxrwmEV6zUagQ-GP4cADyrKeubKn3TKP_KiZJSWCYj-wlmyYQRCvfmngcQ1zIQgiQbfrBUnpNH0an64T/s1600/6223.jpg" height="320" width="214" /></a></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /><br />தாத்தாவை நினைக்கும் பொழுதெல்லாம் ஸ்ரீநிவாஸ் நினைவுக்கு வருவது தற்செயல் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் கேசட்டுகளாக நான் வாங்க ஆரம்பித்த நேரம் தாத்தா தவறாமல் மேண்டலின் கேசட் போடச் சொல்வார். எனக்கு அந்த வயதில் அவர் இதைச் சொல்லிய பொழுதெல்லாம் எரிச்சல் மட்டுமே வரும். தாத்தா எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு ஸ்ரீநிவாஸ் கேசட் ஒன்று வாங்கித் தர சொல்லிய ஞாபகம் கூட இருக்கிறது.<br /><br />முகங்களின் நினைவுப்பதிவேடுகள் விசித்திரமானவை. தாத்தாவுக்கு கண் பார்வை 80களின் இறுதியில் இல்லாமல் ஆன பின், என் முகத்தை ஒரு முறை தடவி பார்த்து மேண்டலின் ஸ்ரீநிவாஸ் முகம் ஞாபகம் வருவதாக கூறியிருக்கிறார். அந்தச் செயல் பாசம் கலந்த கற்பனையின் விசித்திரம். ஸ்ரீநிவாஸ் என்பது அவருக்கு வளர்ந்த கணேஷ். கணேஷ் வளரப்போகும் ஸ்ரீநிவாஸ். கண் பார்வை இல்லாத அவரால் அப்படித்தான் நினைத்திருக்க முடியும்.</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwHWg373oOznKdwnNuEaIJUaTdeWs3N8HfQglTRzI0iFV6n0qDt4u9IN3ypnyR-URGRKE9E0j6pozCtPj2OX7Y_nxQbeE8XUdNB6_S2PEknH8Mg_l7T-bXGRZwKXo6243GyM0U/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwHWg373oOznKdwnNuEaIJUaTdeWs3N8HfQglTRzI0iFV6n0qDt4u9IN3ypnyR-URGRKE9E0j6pozCtPj2OX7Y_nxQbeE8XUdNB6_S2PEknH8Mg_l7T-bXGRZwKXo6243GyM0U/s1600/images.jpg" /></a></div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /><br />ஸ்ரீநிவாஸ் இன்று இறந்து விட்டாராம். தாத்தா இறந்து 11 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீநிவாஸ் படம் பதித்த அந்த ஆடியோ கேசட் இன்னும் வீட்டில் இருக்குமென்று நினைக்கிறேன்.</span></div>
Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-22421616981457134192014-09-17T12:47:00.002+05:302014-09-17T14:01:47.473+05:30தலைமுறை இடைவெளி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தலைமுறை என்பது எதைச் சார்ந்த வரையறை என்பதில் இப்பொழுதெல்லாம் எனக்கு பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. டிவி விளம்பரத்தில் பாட்டி பேத்திய ”ஹாட்டா” இருக்கே என்கிறார். என்னை மாதிரியே சுற்றம் முற்றம் பார்த்து ஒரு ஏழு வயது சிறுவன் அதே விளம்பரத்தைப் பார்த்து குறுநகை உதிர்க்கிறான். ”போஸ்டல் சர்வீஸ் இப்போ ரொம்ப கஷ்டமாயிருக்கு. எல்லாம் கம்ப்யூட்டரைஸ் ஆயிடுச்சு”ன்னு ஆறு வருஷம் முன் வி.ஆர்.எஸ் வாங்கிய அம்மா தினமும் ஃபேஸ்புக்ல அப்டேட்ஸ் அனுப்புகிறார். வீட்டில் வேலை பார்க்கும் அம்மாளும், என் வீட்டம்மாளும் (வேலை பார்க்கும் அம்மாளை பார்க்கும் வேலை பார்க்கும் அம்மாள் ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்பா) ப்யூட்டி பார்லர் பத்தி பேசிக்கறாங்க. அந்த அம்மாளுக்கும் என் வீட்டம்மாளுக்கும் வயது வித்தியாசம் 35, வருமான வித்தியாசம் ஒரு 20ஆயிரம் வரை இருக்கலாம் (யாருக்கு அதிக சம்பளம் என்பது எனக்கு குழப்பம் தரக்கூடிய விஷயம்). ஐந்து வயது ஆகும் பக்கத்து வீட்டு பாசு, மாமா உனக்கு இன்னும் ஒழுங்கா பேசத் தெரியலன்னு சொல்வது வரை நிறைய பார்த்து கேட்டாகி விட்டது. என்ன சொல்ல வர்றேன்னா இப்படி எல்லா விதத்திலயும் தலைமுறை என்பது வயதைத் தாண்டிய, விஷய ஞானத்தைத் தாண்டிய, வருமானத்தைத் தாண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அப்போ “தலைமுறையை” எதைக்கொண்டு வரையறை செய்வது?<br />
<br />
சென்ற வாரம் வீட்டிற்கு சுவாமிநாதன் சார் வந்திருந்தார். அம்மாவுடன் 20+ ஆண்டுகள் தபால்துறையில் வேலை பார்த்தவர். அவருடைய முதல் பையனும் என் தம்பியும் வகுப்புத் தோழர்கள். வி.ஆர்.எஸ் வாங்கிய அம்மாவுக்கு தபால்துறை பற்றிய விஷய ஞான வடிகால் அவரே. இப்போ வந்திருக்கிற சிஸ்டமெல்லாம் பழசை விட ரொம்ப மோசம். ஸ்பீடு பெர்ஃபார்மன்ஸ் எதுவும் சரியில்ல, பாடாவதி நெட் கனெக்ஷென் வச்சிகிட்டு காலம் தள்ளறது ரொம்ப கஷ்டாமிருக்குன்னு என்றார். பேப்பர்ல அக்கவுண்ட் இருந்த காலத்துல ஒரே நாள்ல எல்லா வேலையும் முடிஞ்சிட்டிருந்ததாகவும் கணினி மயமான வேலைகள் முடங்குவதற்கு முக்கிய (மலச்சிக்கல் காரணமா முக்கவில்லை) காரணம் தொழில்நுட்பத்தில் இருக்கும் சார்புத்தன்மை (dependency) என குறைபட்டுக்கொண்டார். தினமும் பெர்ஃபார்மன்ஸ் அனாலிசிஸ் செய்யும் எனக்கு அவர் சொல்வது மேலோட்டமான விஷயமா தெரியவில்லை. ஸ்பீடு என்பதை தனியாகவும் பெர்ஃபார்மன்ஸ் என்பதை தனியாகவும் தெளிவாக சொல்கிறார். ஆக வயதில் மூத்த அந்தத் தலைமுறை என நான் வரையறை செய்த தலைமுறை அந்த வரையறையில் இல்லை.<br />
<br />
சுவாமிநாதன் சார், எங்கள் வீட்டிற்கு வந்த விஷயம் இன்னும் சுவாரஸ்யமானது. தனது மூத்த மகன் இப்பொழுது வங்கியில் வேலை பார்ப்பதாகவும் அவனுக்கு வரன் பார்ப்பது சம்பந்தமாக சுவாமிநாதன் சார் அப்பாவிடம் பேச வந்திருந்தார். என் தம்பிக்கும் அவருடைய மகனுக்கு ஒரே வயது. 25 நடக்கிறது. எங்கள் வீட்டில் என் தம்பிக்கு வரன் பார்ப்பது பற்றி இன்னும் நினைக்கவேயில்லை. அதனால் எனக்கு அவர் சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் கேட்டே விட்டேன். என்ன சார் அதுக்குள்ளேவா? 25தான நடக்குது என்றதற்கு, ”நானும் அப்படித்தான் நினைச்சேன். இப்பெல்லாம் பையன் அடிக்கடி ஊர் ஊரா சுத்தறான். கேட்டா ஃபிரண்டு கல்யாணம்ங்கிறான். தெளிவா தெரிஞ்சிக்கலாம்ன்னு, பையனா பொண்ணான்னு கேட்டா... கூட படிச்ச பையன்ங்கிறான். இதோட இப்படி நாலஞ்சு தடவ சொல்லிட்டான். போன வாரம் அவன் ஃபிரண்டு அப்பா வீட்டிற்கு வந்து பத்திரிகை கூட கொடுத்திட்டு போனார். அதான் ஒருவேளை நாம லேட் பண்ணிடக் கூடாதேன்னு நானும் ஆரம்பிச்சுட்டேன்”ன்னார்.<br />
<br />
எனக்கிருக்கும் கேள்விகள் இவை தான்.<br />
1. சுவாமிநாதன் சார் தன் மகனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததற்கு சொன்ன அத்தனை காரணங்களும் என் தம்பியிடமும் சமீப காலங்களில் நடந்தேறியிருக்கின்றன. இது என் தம்பியும் சுவாமிநாதன் சாருடைய மகனுக்கும் பொதுவான விஷயமா?<br />
2. என் தம்பியும் சுவாமிநாதன் சாரும் கொஞ்ச நாள் முன்னாடி ரயில்வே ஸ்டேஷனில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எனக்கு வேலை நிமித்தமாக ஒரு தொலைபேசி அழைப்பு வரவே நான் அவர்களுடன் உரையாடவில்லை. அப்படி என்ன பேசினாங்க?<br />
3. போன வாரம் தம்பிகிட்ட தொலைபேசிட்டிருந்த போது சுவாமிநாதன் சார்கிட்ட பேசினியான்னு அவன் என்னைக் கேட்டது ஏதேச்சையான விஷயமா?<br />
4. இந்தப் பதிவை என் அம்மாவும் படிப்பாங்கங்கிறது என் தம்பிக்கு தெரியும். அது தெரிஞ்சதனால இருக்கிற மாஸ்டர் ப்ளானா?<br />
<br />
தலைமுறை என்பதை எப்படி வரையறுப்பது? அப்படின்னா தலைமுறை இடைவெளி? யாராச்சும் ஃபில் பண்ணுங்கப்பா :)</div>
Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-72313066429211459012013-12-04T14:49:00.002+05:302013-12-04T14:49:29.832+05:30சிக்ஸ் பேக்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ராமசாமியின் ஆதர்ச ஹீரோ<br />
சிக்ஸ் பேக்குக்கு மாறி ஆறு வருடம் ஆகிறது.<br />
<br />
இப்பொழுதெல்லாம் அவன்<br />
அதிகம் நினைப்பது சிக்ஸ் பேக் பற்றிதான்.<br />
<br />
நண்பர்களில் ஒருவனுக்கு<br />
இத்தினுயூண்டு சிக்ஸ் பேக் எட்டிப்பார்ப்பதில்<br />
இவனுக்கு அவ்வளவு பொறாமை.<br />
நண்பனிடம் கேட்டதற்கு<br />
தினமும் 15 கோழி முட்டைகளின்<br />
வெண்கருவை மட்டும்<br />
தின்பதாக கூறினானாம்.<br />
<br />
சிமெண்ட் கோணிப்பையில்<br />
புஜங்கள் முறுக்கேறிய ஒருவன்<br />
சிக்ஸ் பேக் தெரிய நிற்பதை<br />
பார்த்திருக்கிறான் ராமசாமி.<br />
<br />
இப்பொழுது<br />
சாலையோர விளம்பர பலகையில்<br />
புஜங்கள் முறுக்கேறிய கையில்<br />
தலைக்கு மேல்<br />
வட்டகை ஒன்றை தூக்கி நிற்கும்<br />
சிக்ஸ் பேக் தெரியாத<br />
ஒருவனைப் பார்த்து<br />
"பாவம்" எனக் கூறி நகர்கிறான் ராமசாமி.</div>
Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-76933327421492758522012-07-03T14:00:00.002+05:302012-07-03T14:00:24.121+05:30சிறு நீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">சில சுவர்க்கறைகளில்</span><br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
மெலிதாக படர்ந்திருக்கும் </div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
சிறு நீர்</div>
</div>Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-48892892922319163522012-06-12T09:19:00.002+05:302012-06-12T09:23:37.382+05:30பசியாறல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
மௌனதிற்காய் சொற்களை<br />
மென்று கொண்டிருக்கிறாய் நீ!<br />
<br /></div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
உன் மௌனத்தை சொற்களால்</div>
<div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px; text-align: -webkit-auto;">
மென்று கொண்டிருக்கிறேன் நான்!<br />
<br />
இருவருக்குமான அத்தியாவசியம்...
</div>
</div>Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-30354058856815595202012-05-15T09:16:00.001+05:302012-06-12T09:23:53.961+05:30கிணறைத் தாண்டிய தவளை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
நேற்றிரவு ஆசாமி ஒருவன்<br />
கிணறைத் தாண்டிய தவளைக் கதையை<br />
சொல்லிச் சென்றான்<br />
இரவில் ஒரு புறம் குதித்து<br />
விடியலில் மறுபுறம் போய் விழுந்தது என<br />
<br />
சாத்தியமில்லை என்றான் சாமானியன்<br />
கிணறு எங்கிருந்தது என கேட்டான் மற்றொருவன்<br />
ஆரம் பற்றிய கேள்வியோடு இன்னொருவன்<br />
அது புனிதத் தவளை என்றனர் சிலர்<br />
தவளையின் சக்தி பற்றி ஆராய்ந்தனர் சிலர்<br />
அந்தத் தவளையைப்<br />
பார்த்ததாகச் சொன்னது வவ்வால்<br />
ஆசாமியிடமே கேட்டுவிடுவதென முடிவெடுத்தனர்<br />
அப்பொழுது விடிந்திருந்தது.</div>Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-83870446133206193582012-02-01T16:13:00.000+05:302012-02-01T16:18:16.758+05:30என்றென்றும் ராஜா - பூவே செம்பூவே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இளையராஜா சாரோட நிறைய பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டு. அந்த மிகப்பெரிய லிஸ்ட்டில் இந்தப் பாடலுக்கும் இடமுண்டு. ஒரே ஆறுதல் கன்னத்தில் மச்சத்துடனும் எத்தி கட்டிய கைலியுடனும் திரையில் திரிந்து கொண்டிருந்த ராதாரவி கோட் சூட்டுக்கு மாறியது வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அவருடைய "தொண்டுமுட்டி"க்கு கால் தூசி பெறாது இந்தப் பாடலில் அவருடைய தோற்றம். அமைதியா துவங்கி எங்கெங்கோ சென்று துவங்கிய அமைதியுடன் முடிவது என்பது எவ்வளவு சுகமானது. இடையில் வரும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் சஞ்சரிக்க முடிந்தாலும் அமைதியா முடிவதில் தான் பேரானந்தம் போல.<br />
<br />
முதல் இடையிசை (interlude) மரபிசை. வீணை தனியாக ஒலிக்கும் பின் வயலின் தனியாக ஒலிக்கும் பின் வீணை பின் வயலின் பின்னர் இரண்டும் ஒன்றாக. உடன் துவங்கும் இருமுக முழவு (tabla) கூடவே வரும் தம்புரா. இங்கு தான் ஆரம்பிக்கும் சந்தேகம். பாடுபவர்கள் சுருதி பிசகாமல் பாட தம்புரா தேவைப்படும் ஆனால் இங்கு முழவுடன் இணைந்திருக்கும் ஏன்? இன்னும் சொல்லப்போனால் பாடலில் இங்கு தான் தம்புரா துவங்குகிறதோ எனக்கூட சந்தேகம் வரும். மரபுகளை உடைக்க கேள்விகள் தேவைப்படுவது போல. புல்லாங்குழல், முழவு, வயலின் எல்லாம் சேர்ந்தால் அந்தப் பன்முகம் கிடைக்கப் பெறலாம் அது மலர்கள் தொங்கும் செட்டிநாட்டு தேக்கு நிலை போல. கதவுகளைத் தாங்கும், கண்ணாடிகளைக் கொண்டிருக்கும், சிறிதளவு பிம்பம் காட்டும். ஆனால் நின்ற இடத்திலேயே நிற்கும். மரபிசை!! பின்னர் ஜேசுதாஸ் மெதுவாக அழைத்துச் செல்வார். வெகுதூரம் போகும் துடிப்பு இருக்கும் காங்கோவின் தாளத்தில் சீராக. எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வரை. வாய்பேசிடும் புல்லாங்குழலில் துடிப்படங்கி மறுபடியும் இருந்த இடத்திற்கே செல்லும். காங்கோவின் துடிப்பு பின்னர் இணையும்.<br />
<br />
இரண்டாம் இடையிசை நவீனம். மரபென்று இதனை ஒதுக்க முடியாது, அழகில்லையென்று தள்ள முடியாது. நிச்சயமாக கடக்க வேண்டிய தொலைவு. தாண்ட முடியாத தூரம். இது பாலம். ஒருவகையில் பாதை. முக்கியமான பிணைப்பு. இரு கரைகளிலும் பிடிப்பிருக்கும். பாலத்தின் மேல் வைக்கும் முதல் அடியில் மட்டக்குரலில் மின் கிதார் பயமுறுத்தும். காங்கோவின் துடிப்பு முற்றிலுமாக நின்றிருக்கும். பதிலாக பேரிகைகள் முழங்க ஆரம்பிக்கும். முழக்கம் சீராகவும் இருக்காது. சலங்கைகள் முதன்முறையாக ஒலிக்கத்துவங்கும். ஆடல் ஆரம்பம். அங்கங்கு வந்து இணையும் வயலினும் இதுவரை இருந்தது போல் மெலிதாக தோன்றாது. இருமுக முழவு அடிக்கடி பழையதை ஞாபகப்படுத்தும் ஆனாலும் பேரிகைகளின் தாக்கத்தில் பழையவை தோற்கும். வேறு வழியில்லாமல் வயலின்கள் கூட்டு சேர்ந்து கொல்லும். பின்னர் கொஞ்சமாக முழவு பேரிகைகளின் தாக்கத்திலிருந்து பாதையை மீட்டு வரும். உக்கிரம் ஓய்ந்திருக்காது. விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை என எழுதியவன் உணர்ந்தவனாக இருப்பானாயிருக்கும். ஜேசுதாஸ் முந்தைய வேலையைத் தெளிவாக தொடர்வார். மெதுவாக அடங்கும் குரல் பூவேவில்.... இறுதியில் புல்லாங்குழல் அதே அமைதி.<br />
<br />
பாடலின் இசையில் எவ்வளவு விஷயம் இருந்ததோ அந்த அளவுக்கு "என்றென்றும் ராஜா"வில் இதன் நிகழ்வும் விஷயமிக்கது. புல்லாங்குழல் இளையராஜாவுக்கு பெரிய பலம். தண்ணீர் போல. போகும் வழியெல்லாம் எல்லாவற்றையும் தழுவி எங்கெல்லாம் நிறைய முடியுமோ அங்கெல்லாம் நிறைந்துவிடும். எல்லா இடங்களிலும் முடிந்தவரை அதன் குளிர்ச்சி. அருண்மொழி (அ) நெப்போலியன் அற்புதக் கலைஞன். அரும்பு தளிரே தளிர் தூங்கிடும், நான் என்பது நீயல்லவோ, ஏ ராசாத்தி... (மலேசியா வாசுதேவனுடன் இணைந்த அதே) வித்தியாசக் குரலுக்கு சொந்தக்காரன். ஆர்ப்பாட்டமில்லாத குரலும் குழலும் அவனுக்கு கைவந்தது வியப்பில்லை அப்படியொரு சாந்தம். தாடிக்காரர் சதானனம். இளைய நிலா, என் இனிய பொன் நிலாவே... கிதார் இசை இவர் மீட்டியவை தான். வயலின் பிரபாகர். கனகம்பீரம். ராஜான்னா வயலின்... எனக்கு பிறகு தான் எல்லாமேங்கிற கர்வம் முகத்தில் தெரியும். தபேலா பிரசாத்... என்ன மாதிரியான டிசைன் இது... கலவை இது? எல்லாத்துக்கும் மேல ஜேசுதாஸ்... பாட்டுல எவ்வளவு சொதப்ப (அசலிலிருந்து விலகுதல்) முடியுமோ அவ்வளவு சொதப்பினார். ஆனால் அவராலேயே இந்த நிகழ்வு அற்புதமானது.<br />
<br />
வயலினும் புல்லாங்குழலும் சேரும் இடத்தில் அருண்மொழியும் பிரபாகரும் சேர்வது அழகு... ஜெயா டிவி கேமிராவுக்கு வணக்கம்... நிகழ்ச்சியின் சோலோ வயலின் பாகங்களை பிரபாகர் அநேகமாக நின்று கொண்டே வாசித்தார்... இசையின் நீள அகலங்களுக்கும் வயலின் வில்வீச்சுக்கும் உயரம் தேவைப்பட்டிருக்கலாம். அவரை அழகாகவும் கம்பீரமாகவும் படம்பிடித்திருந்தார்கள்... அதிலும் நிகழ்ச்சியின் முடிவில் ராஜா அவரின் பங்களிப்பை நிறுவிய பொழுது இவருடைய முகத்தில் உலகத்தையே வென்றுவிட்ட பெருமிதம் தெரிந்தது. நிழல் போல நானும் பிறகு வரும் ஆலாபனையை தாள ஆரம்பத்தில் தவற விட்டு அழகாக தாளத்துடன் இணைந்தார். ராஜாவோட பலம் தெளிவான நிறுத்தங்கள். ஃபார்முலா பந்தயத்தின் நிறுத்தங்களைப் போல... வேகத்துக்கேற்ற தூண்டுதல் அங்குதான் கிடைக்கும் எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் செம்மைப் படுத்தப்படும். ஜேசுதாஸ் கச்சேரி மூடில் இருந்திருப்பார் போலும்... இந்தப் பாடலின் சிறு நிறுத்தங்களுக்கு மதிப்பளிக்கவே இல்லை... வாய்பேசிடும்... புல்லாங்குழல்... நீதானொரு... பூவின் மடல்... நான்கு நிறுத்தங்கள் போதுமென்று நினைத்து விட்டார் போலும். ஆனால் மெல்லிய புன்னகையுடனும் அந்த அசகாய குரலில் இவர் வீசுவது லிட்டில் பாயோ... ஃபேட் மேனோ... விழுந்தால் ஜென்மம் முழுவதும் அதன் தாக்கம் இருக்கும்.<br />
<br />
ராஜா ரசிகர்களின் மனக்குவியல்களில் இந்த பாடல் ஒரு முத்து. இரண்டாம் இடையிசை மின் கிதாருடன் துவங்குகையிலேயே அவர்களின் ஆராவாரமும் துவங்குகிறது. அந்த இடையிசையில் வயலின் குழு சேர்கையில் அந்தப் பரவசம் தரும் இன்பத்தை எத்தனை பேர் அனுபவித்திருப்பார்கள். இசையுடன் இணையும் அந்தப் பாசக் கூச்சலுக்குப் பின் எத்தனை இதயத்துடிப்பு இருந்திருக்குமோ? இந்த இடையிசை முடியும் முன்னரே ஜேசுதாஸ் பாடத்துவங்க, வேலையில் கவனமாக இருந்த நடத்துநர் புருஷோத்தமன் என்ன செய்வதென புரியாமல் ஜேசுதாஸைப் பார்த்தபடியே இசைக்கோர்வையை தொடர எல்லாம் குளருபடியானது. ஆனாலும் இசைஞர்கள் ஜேசுதாஸை மொத்தமாக கைவிடாமல் அவர் பாடும் வரிகளுக்கேற்ற தாளத்துடன் இணைய, நுழைகிறார் ராஜா. இது என் ஷோ. இப்படியிருக்க கூடாது என ஜேசுதாஸை நிறுத்துகிறார். ஜேசுதாஸ் வாழ்நாளில் இவ்வளவு பேர் முன்னிலையில் தாளத்துக்கு தவறி மீண்டும் துவங்கியது இது எத்தனையாவது முறையாக இருக்க முடியும்? ராஜா என்ன சொல்லி நிறுத்தினாரோ... ரிக்கார்டிங்கென்று ஜேசுதாஸ் மைக்கில் சொல்ல... மறுபடியும்... இங்கு ஜனங்களின் ஆராவாரம். இது ராஜாவுக்கு. தங்களுக்குத் தேவையானதை தெளிவாக தரும் அவர்களுடைய ராஜாவிற்கு. இங்கு ஜெயா டிவி கேமிரா கண்களுக்கு தீனி... முதல் முறை மின் கிதார் துவக்கத்திற்கு தவறாக சதானனத்தை காண்பிப்பார்கள். பின்னர் அது மின் கிதார் வாசிப்பவர் மேல் திருப்பப்படும். டிரம்ஸ் வாசிப்பவரின் தலையசைப்பையும் இரு வேறு கோணங்களில் படம்பிடிக்க இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த டிரம்மருக்கு ஒரு ஷொட்டு டிரம்ஸுக்கும், தலையசைப்பிற்கும். இரண்டாம் முறையும் ஜேசுதாஸ் சொதப்ப, ராஜா இந்த முறை வெறும் கையசைவில் அவரை நிறுத்தி இசைஞர்களுக்கு பாதை காட்டுகிறார். முதல் முறை ஜேசுதாஸைக் காப்பாற்றியவர்களை இந்த முறை ராஜா காப்பாற்றுகிறார். பின்னர் ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க ராஜாவின் முகத்தில் வரும் அந்த நிம்மதி ஆள்காட்டி விரலுடன் அவர் உதிர்க்கும் அந்த புன்னகையில் தெரியும். பிறகு நான் செய்த என ஜேசுதாஸ் பாடுகையில் தாமரை மலர்வது போன்ற ராஜா உதிர்க்கும் அந்த பாவம் எல்லாம் சரியாக்கப்பட்டதன் நிறைவு.<br />
<br />
முடிவு என்னவென்று பார்த்த பின்னரும் ’வணக்கமோ’’நன்றியோ’ தெரியாமல், கூட்டம் கலையட்டும் எனப் பொறுமையுடன் டூரிங் டாக்கீஸில் கொடுத்த கடைசி ஐம்பது காசு வரை திரையை தரிசிக்கும் அந்த ரசிகனின் பொறுமையுடன் தான் ராஜாவின் பாடல்களை ரசிக்க வேண்டும். பாடல் என்பது வெறும் மனிதர்களின் குரல் அல்ல அது இசையுடன் கூடிய ஒருவித பிணைப்பு. ராஜாவின் பாடல்களில் அநேக பாடல்களில் நிறைவுப் பகுதி அருமையானதாக இருக்கும். இளைய நிலா மிகச்சிறந்த உதாரணம். இந்த நிகழ்விலும், குற்றவுணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த ஜேசுதாஸ் பூவேவேஏஏஏஏ க்குப் பின் எனக்காக இன்னொரு வாட்டி பார்க்கலாமா என கேட்கிறார். ராஜாவிற்கும் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். மெதுவாக மைக்கை ஜேசுதாஸிடமிருந்து வாங்கி விஷயம் என்னன்னா அவர் சொல்ல ஆரம்பிக்க... அருண்மொழி ஊதிக்கொண்டே இருக்கிறான். குழலூதும் கண்ணனல்லவா... ராஜாவுக்கும் அப்பொழுது தான் தோன்றுகிறது பாடல் இன்னும் முடியவில்லையென்று. மக்களுக்கும் தெளிவாக்குகிறார். பின்னர் அதனை திருத்துகிறார். அப்பொழுது அருண்மொழி முடிக்கையில் ராஜாவின் கையசைவை கவனிக்கணும் அது இயற்கைக்கு செய்யும் அர்க்ய பிரதானம்.<br />
<br />
இத்துடன் முடியுமா. ஜேசுதாஸ் பெரிய ஆளுமை. குற்றவுணர்ச்சியுடன் வீடு செல்ல முடியுமா. திருத்திக்கொள்கிறார். மறுபடியும் மின் கிதார். புருஷோத்தமன் அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்க ராஜா தானே இசைஞர்களை வழிநடத்த... பதறியபடியே புருஷோத்தமன் புத்தகத்தை வைத்துவிட்டு அதே பாடலுக்கான தன் வேலைக்கு மீண்டும் திரும்ப ராஜாவுக்கு சந்தோஷம். கூட்டத்துக்கு தேவையான ஒன்ஸ்மோர்கள் இப்படியாக போய் சேர்கின்றதே என்கிற உற்சாகத்துடன் ராஜா. இந்த முறை ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க கூட்டத்தில் பலத்த கைதட்டல். அது இசைக்கு அவர்களின் வரவேற்பு, ஜேசுதாஸ் ராஜா எல்லோருக்குமான வாழ்த்து. தவறை உணர்ந்து திருந்துபவனுக்கும், திருத்துபவனுக்கும் என்றென்றைக்குமான அவர்களின் பொது மன்னிப்பு. நான் செய்த பாவம் என்னோடு போகும் என ஜேசுதாஸ் தன்னை நோக்கி விரலைக் காட்டுவதைப் பார்த்த ராஜா கையெடுத்து ஜேசுதாஸை வணங்குவது கலையைத் தாண்டி மனிதத்துக்கான பாடம். அது தரும் நெகிழ்வு அலாதியானது. புல்லாங்குழலும் மணியும் அதே அமைதிக்கு எல்லாவற்றையும் திருப்ப... சாந்தி! என ஜேசுதாஸ் முடிக்கிறார்.<br />
<br />
ராஜா இருக்கும் காலத்தில் காதுடன் இருப்பதைத் தவிற வேறென்ன வேண்டும் உலகத்தில்.<br />
<br />
<br />
பார்க்க பூவே செம்பூவே - http://www.youtube.com/watch?v=xEYONZd2If4<br />
பார்க்க என்றென்றும் ராஜா இசைஞர்கள் - http://www.youtube.com/watch?v=-oFG4ee_YGw<br />
<br /></div>Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6537565.post-2246513488927861372011-12-19T12:52:00.002+05:302011-12-19T12:52:58.595+05:30நீர்த்துளி நிழல்தகிக்கும் ஒளி
மேல் படர
கரும்புள்ளி நிழலாய்
எஞ்சுகிறது நீர்த்துளி!!!Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-19014175576708671242011-09-19T10:57:00.001+05:302011-09-19T10:58:51.291+05:30எதிர்பாராத மோதல்பற்றுதல் இல்லை<br />
கடக்கின்றன கணங்கள்<br />
இருப்பவைகளில் இல்லாதவைகளாக<br />
இல்லாதிருந்தவைகளை இருந்தவைகளாக<br />
மாற்றி மாறி<br />
<br />
இணைவதில் சம்மதமில்லை<br />
சிலுவையாக கூட்டலாக<br />
இருவேறு திசையில் கோடுகள்<br />
மோதி<br />
நீண்டனவா நெளிந்தனவா<br />
<br />
கோணத்தில் கவனம்<br />
சாய்வுக்கோடு <br />
ஏணி<br />
இடமிருந்து வலமோ<br />
வலமிருந்து இடமோ<br />
மேலிருந்து கீழோ<br />
கீழிருந்து மேலோ<br />
<br />
இணைவது தெரிவதில்லை<br />
வட்டங்களில்<br />
நிலா <br />
வடை <br />
தெரிவுகள் <br />
அலைகிறது கணினிச் சுட்டி<br />
பறக்கின்றன காக்கைகள்<br />
<br />
எதிர்பாராத மோதலின்<br />
உடனிகழ்வான சேதமாய்<br />
இல்லாமல் போன <br />
ஒரு கணம்<br />
<br />
(<a href="http://www.atheetham.com/story/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">அதீதம்.காம் இல் வெளிவந்தது</a>. நன்றி நண்பர் எல்.கேவிற்கு)Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-40856974238814308192011-08-25T10:15:00.003+05:302011-08-25T11:15:52.004+05:30விட்டுச் செல்வதில்விட்டுச் செல்வதில் <br />
ஏதோவொன்று இருக்கிறது<br />
கடந்த தூரமாக<br />
இழந்த சொந்தமாக<br />
மாறிய நம்பிக்கையாக<br />
மறந்த பொருளாக<br />
கலைந்த ஒழுங்காக<br />
விடுத்த வழக்காக<br />
மறைந்த நினைவாக<br />
ஏதோவொன்று இருக்கிறது<br />
<br />
வெளிகளிலிருந்து வெளிகளுக்கு<br />
சொந்தங்களிலிருந்து சொந்தங்களுக்கு<br />
நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு<br />
மறந்தவைகளிலிருந்து மறப்பவைகளுக்கு<br />
ஒழுங்கிலிருந்து ஒழுங்கிற்கு<br />
வழக்கிலிருந்து வழக்கிற்கு<br />
நினைவிலிருந்து நினைவுக்கு<br />
அழைக்கும் நீயோ<br />
நகரும் நானோ<br />
விட்டுச் செல்வதில் <br />
இருந்து விடவே செய்கிறோம்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-54322709052871735592011-08-11T14:59:00.001+05:302011-08-11T15:20:18.895+05:30ஒரு புத்தகம் - அன்பளிப்புபக்கங்களாக <br />
நிறைந்திருக்கிறது புத்தகம்<br />
என்றோ யாரோ <br />
பிடித்த வரிகளை<br />
கோடிட்டிருக்கிறார்கள்<br />
<br />
படரும் வேட்கையில்<br />
ஏதோவொரு பரப்பொன்றில்<br />
சிதறிய திரவம் <br />
படித்த கடைசி வரிகளின்<br />
நினைவிற்க்காய்<br />
கவிழ்க்கப்பட்ட பக்கத்தில்<br />
வண்ணப்பூச்சு எழுத்தாய்<br />
<br />
தலைப்பு<br />
எழுதியவர் <br />
தெரியப்படுத்தும்<br />
முதல் பக்கத்தில்<br />
கோடுகளோ<br />
வண்ணப்பூச்சுக்களோ<br />
பார்த்ததில்லை<br />
கையெழுத்துக்களில்<br />
அன்பளிப்பு என்று பார்க்கையில்<br />
மறுமுறை வாசிக்கிறேன்<br />
அன்பளிப்பென்றே<br />
உறுதி செய்ய!Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-14448670087965508982011-08-10T00:00:00.000+05:302011-08-10T00:00:05.924+05:30வென்படம்மூடிய வளைவரைகளான<br />
வட்டங்களில் <br />
உறுப்புகள்<br />
கணங்களின் தொடர்புகள்<br />
முடிவுறு தொகுப்புகள்<br />
<br />
சூழ்ந்திருக்கும் <br />
சதுர வெளி<br />
வட்டங்களின் ஒன்றிப்புகளிலும்<br />
இருக்கிறது<br />
வென்படம்<br />
<br />
Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6537565.post-46407669018265630612011-08-05T12:32:00.000+05:302011-08-05T12:32:17.926+05:30ஆறும் அது ஆழமில்ல<a href="http://www.youtube.com/watch?v=yJtpqmxcsvI"></a><br />
<br />
தண்ணியில கோலம் போடு, <br />
ஆடி காத்தில் தீபம் ஏத்து, <br />
ஆகாயத்தில் கோட்டை கட்டு, <br />
அந்தரத்தில் தோட்டம் பொடு, <br />
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் பொடு, <br />
அத்தனையும் நடக்குமய்யா ஆச வச்ச கிடைக்குமய்யா, <br />
ஆனா <br />
கிடைக்காது, <br />
நீ ஆசை வைக்கும் மாது...<br />
<br />
’ம்ம்ம்ம்’ பெண் குரல்களில் இசையின்றி துவங்கும் பாடல், தாளவாத்தியங்கள் சேர நாதஸ்வரத்துடன் இணைந்து, பின் ராஜா சார் குரலில் ஆர்ப்பரிக்கும். ”On your mark! Get set! Go!"ன்னு ஒரு பந்தயத்துக்கான துவக்கம் மாதிரியே இருக்கும். தாள வாத்தியத்துடன் சேரும் நாதஸ்வரம் ஒரு சில நொடிகளுக்குப் பின் நின்றுவிடும். தாள வாத்தியம் மட்டும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருக்கும். அந்த சில நொடிகள் வீரர்கள் ஓடத் துவங்கப் போவதற்கான கட்டியம். முதல் முறை பாடுகையில் ”ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல” என்ற இரு வரிகளுக்கு இடையில் ஒரு கிதார் ஃபில்லர் இருக்கும். டேய் இந்தா நான் ஓட ஆரம்பிச்சுட்டேன் நீயும் ஓடறியான்னு கேட்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் பாடல், குரலுக்கும், இசைக்கும், ரசனைக்குமான பந்தயம். அதே போல் ”ஆனா கிடைக்காது”ல் ’ஆனா’வுக்கு பின்னும் ’கிடைக்காது’க்குப்பின்னும் வரும் புல்லாங்குழல் ஃபில்லர் ஏன் என்பது ராஜாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன ஃபில்லர்கள் ராஜாவோட பெரிய பலம். <br />
<br />
எனக்கு சரியா இசை நுணுக்கம் தெரியாது. ஆனா ‘ஆனா’வும், ‘கிடைக்காது’வும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கள் ஏழு சுரங்களில் கீழிருந்து மேல் சுரங்களுக்கான பெரிய தாவலாக இருக்கலாம். குரலில் (ஏற்ற இறக்கமில்லாமல்) இப்படியான தாவல்கள் தொடர்ந்து வருவதால் கேட்பவர்களுக்கு தினவேற்படலாம். அதனால் இந்த மாதிரி ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். குறிப்பாக புல்லாங்குழல், வயலின், பியானோ, கிதார் ஃபில்லர்கள் ராஜா சாரின் நுண்திறமை. நிறைய பாடல்களில் கேட்டிருக்கிறேன். <br />
<br />
இந்தப் பாடலில் ராஜா சார் வரிகளை பாடி முடிப்பது அழகு... எப்படி சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்க வேண்டுமோ அப்படியே சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்காமல் நிறுத்தப் படவும் வேண்டும். ”கோலம் போடு”, “தீபம் ஏத்து”ன்னு சட்டென முடிப்பதும்... ”கோட்டை கட்டுஉ உ உ உ”ன்னு நீடிப்பதும் அழகு.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6537565.post-85445160603582181402011-07-12T11:17:00.002+05:302011-07-12T11:17:35.112+05:30பயங்களின் வாசல்பயங்களின் வாசலில்<br />
கால் வைக்கிறேன்<br />
உள்ளே சென்றால்<br />
இல்லாமல் போகலாமென்ற<br />
முதல் பயத்தை<br />
மிதித்தவாறேGanesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-62868480177501514622011-06-01T14:45:00.005+05:302011-06-01T15:34:46.001+05:30பத்து வரிகளுக்குள்பத்து வரிகளுக்குள்<br />
எழுதிவிடுகிறேன்<br />
மிகுந்திருந்தால் நீ பொறுப்பு<br />
இல்லையென்றால் நான்<br />
எதுவும் செய்யாமல் <br />
கடந்து போனால்<br />
சாவு,<br />
நீ அல்லது <br />
நான்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-12756149082960799362011-05-17T12:33:00.003+05:302011-05-18T15:21:29.192+05:30பழைய பேப்பர்ஞாயிற்றுக்கிழமை! வழக்கம் போல 9-12 காலை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. மின்சாரம் இல்லாத இந்த அரை மணி நேரத்தில் அம்மா தெப்பலாக நனைந்திருந்தாள். வழக்கம் போல என்பதில் அவளுக்கு நிறைய திட்டமிடல்கள் இருந்ததன. காலை இட்லிக்குச் சட்னி அரைப்பது, மதிய கூட்டுக்கு தேவையான தேங்காய் இத்யாதி கொண்ட கரைசலை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்வது என மின்சாரம் சார் சில வேலைகளை ஒன்பது மணிக்கு முன் செய்து முடித்துக் கொள்வாள். இந்த வேலைகளில் காட்டிய முனைப்பு அவளது வியர்வைக்காய் பெரும் பங்காற்றியிருக்க வேண்டும். இவ்வளவையும் முடித்து <br />
சாப்பிட உட்கார்ந்ததும், பழைய பேப்பர்க்காரன் குரல் கேட்டது அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்க கூடும். வேகமாய் எழுந்து சென்று “நேத்து வரச்சொன்னா உன் இஷ்டத்துக்கு இன்னிக்கு வந்து நிக்கிறியே! நாங்க வீட்ல மத்த வேலையைப் பாக்காம உன் வேலையை பாத்திட்டு அலைய முடியுமா” எனச் சடசடவென பொரிந்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.<br />
<br />
வாரயிறுதி விடுமுறைக்கு ஊருக்குச் வந்திருந்த எனக்கு பேப்பர்க்காரனைப் பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்னால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை. எது தேவையான பேப்பர் எது தேவையில்லாத பேப்பர் என நிர்ணயிக்கும் உரிமை என்னிடம் இருக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு பழைய பேப்பர் என்று நினைத்து கழித்த கட்டில் அம்மா எடுத்து வைத்திருந்த பக்தி மலர் கட்டும் இருந்திருக்கிறது. அப்பொழுது வாங்கிக்கட்டிக்கொண்டது இன்றும் நினைவிருக்கிறது. அம்மாவிடம் ஏதாவது சொல்லப்போய் அவளது வியர்வைச் சூடு என்னை பொசுக்கிவிடுமென்கிற பயமும் இருந்தது. இருந்தாலும் பேப்பர்க்காரனிடம் “அண்ணே! காலனிக்குள்ளே போய்ட்டு திரும்பி வரும்போது ஒரு எட்டு பாத்திட்டுப் போங்க! அம்மாகிட்ட கேட்டு எடுத்து தர்றேன்” என்று சொன்னேன். நமக்கு தேவையில்லாதது என்றாலும் நம்மை அச்சுறுத்தும் வரை மனிதன் அதைக் கண்டுகொள்வதில்லை. தேவையில்லாதவை என்பதனால் அதன் இருப்பும் தேவையில்லாததாகி விட முடியாது. காலப் போக்கில் பெரிய இடையூறாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான உதாரணம் மலச்சிக்கல். ஆனால் இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லும் தைரியம் எனக்கு அப்பொழுது இல்லை.<br />
<br />
இந்நேரத்தில் பேப்பர்க்காரனைப் பற்றி விவரிப்பது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். நடுத்தர வயது இளைஞன். வயது 30-32ல் இருக்கலாம். கருத்த உருவம். மெலிந்த தேகம். முருக்கேறிய கைகள் என அன்றாட தேக உழைப்பின் அத்தனை அடையாளங்களையும் கொண்டிருந்தான். நன்கு எண்ணெய் தேய்த்து ஒழுங்காக சீவப்பட்ட அடர்த்தியான தலைமயிர். அதைப் பார்க்கும் பொழுது முடி உதிர்வதைத் தடுக்க, ஈரோடு வரை சென்று வாங்கி வந்த கருவேப்பிலையும் இன்னொரு மூலிகையும் கலந்த எண்ணெய்யின் ஞாபகம் வந்து போனது. தள்ளுவண்டியில் சில புதிய ப்ளாஸ்டிக் பொருட்களையும் ஒரு பெரிய சாக்குப் பையையும் வைத்திருந்தான். சாக்குப் பை, வெள்ளை காக்கி என அரிசி மூடைச்சாக்கு, நெல் மூடைச்சாக்கு என பல்வேறு சாக்குகளை சேர்த்து தைத்திருந்தது. பெரியதென்றால் என்னைப் போல் ஒரு மூன்று பேரை அதில் முழுதாக அடைக்கலாம் அவ்வளவு பெரியது. சாக்குப்பையை இரண்டாக பிரிக்குமாறு ஒரு அட்டையை வைத்திருந்தான். அட்டை கொண்டு பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் சேகரித்த பழைய பேப்பர்களையும், மறு பகுதியில் சேகரித்த பழைய உடைந்த ப்ளாஸ்டிக் பொருட்களையும் நிரப்பியிருந்தான். பழைய பேப்பர் பகுதி பெரியதாக இருந்தது. கொள்ளளவிலும், கொண்டிருந்த அளவிலும். ப்ளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதாக தேவையற்றதாகிவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் ப்ளாஸ்டிக் குடத்தின் பயனைப் பார்த்திருக்கிறேன். வாங்கிய புதிதில் குடி தண்ணீர் நிரப்ப உபயோகப்படுத்தப்பட்டது. அந்நாட்களில் வீட்டில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்தது. கைப்பிடி ஓரம் உடைந்த பின்னர் குழாயடி அருகே. நிறம் மங்கிய பின்னர் மாடியிலிருந்து மழை நீர் வடியும் இடங்களில். மழை நீர் நிரம்பி பாசி படர்ந்த பின்னரே அது தேவையில்லாததாகிறது. இதற்குள்ளாக அதற்கு ஒரு மூன்று வயதாகியிருக்கும். அப்படியான இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைப் பேப்பர்க்காரனின் சாக்குப் பையில் கண்டேன். இப்படி பாதிக்கும் சற்று அதிகமாக நிரம்பியிருந்த சாக்குப் பையின் மீதி வெளிப்புறமாக சுருட்டப்பட்டிருந்தது. அந்தச் சுருளின் அடர்த்தி ஒரு கிரிக்கெட் ஸ்டெம்ப்பின் அளவு இருக்கலாம். மூன்று அல்லது நான்கு முழுச் சுற்றுக்கள் இருந்திருக்கலாம். காலை பத்து மணிக்குள்ளாக இவ்வளவு நிரப்பியிருக்கிறானே என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. ஒருவேளை நேற்று சேகரித்தவற்றுடன் இன்று சேகரித்தவையையும் சேர்த்து விற்க எண்ணியிருப்பான் என நினைத்துக் கொண்டேன். அப்படியிருப்பின் ஏன் அவ்வளவையும் வீணாக தள்ளிக்கொண்டு வரவேண்டும், ஏதாவது ஒரு கடையிலோ அல்லது தெரிந்த வீட்டிலோ அல்லது தெரு முடிவுகளிலோ, காலி இடங்களிலோ போட்டு வைத்திருக்கலாமே என்னும் சந்தேகமும் தோன்றியது. அவனிடம் ஒரே ஒரு சாக்குதான் இருந்திருக்க வேண்டும். அதான் எல்லாச் சாக்குகளின் கலவையாக இருக்கிறதே. அதான் அதிலும் அட்டையைக் கொண்டு தடுப்பிட்டு பிரித்திருக்கிறான் என நினைத்துக் கொண்டேன். எப்படியிருப்பினும் இன்றையச் சாக்கு நிறைந்தே இருந்ததா அல்லது நிறைக்கப் பட்டதாவென எனக்கு தெரியவில்லை. இப்பொழுது பெரிய சாக்கில் என் யூகங்களும் சேகரமாகியிருந்தன. <br />
<br />
பேப்பர்க்காரன் சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களைக் கழட்டி விட்டிருந்தான். உள்ளே அணிந்திருந்த பனியனில் இருந்த எழுத்துக்களில் நடுவில் இருந்தவை வெளியே தெரிந்தன. இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) ஈற்றான சுழியும் கோடும் தெரிந்தன. அதற்கடுத்து ‘ம’ என்ற எழுத்து முழுதும் தெரிந்தது. பின்னர் பழையபடி இரண்டு அல்லது மூன்று சுழியின் (ன அல்லது ண) வின் துவக்க சுழி தெரிந்தது. முழு வார்த்தை ”கண்மணி” என இருந்திருக்கலாம். அல்லது ”தினமணி” என இருந்திருக்கலாம். மொத்தத்தில் என்னை யூகங்களால் நிறைத்திருந்தான் பேப்பர்க்காரன். ”நேத்து கொஞ்சம் லேட்டாயிருச்சு. ஆறு மணிக்கு மேல வந்தா, அம்மா எடுத்துத் தருவாங்களான்னு தெரியல. நாளைக்கு ஞாயித்துக்கிழமை வந்து எடுத்துக்கலாம்னு போயிட்டேன். சாப்பிடற நேரமா வந்துட்டேன் போலிருக்கு அதான் அம்மா கோச்சுகிட்டாங்க. நான் திரும்ப போகும் போது வந்து எடுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் தள்ளலானான். தெளிவாக அவன் சொன்ன விஷயங்கள், அம்மாவின் பேச்சைப் பற்றிய அவனது புரிதல் எல்லாம் தொழிலில் அவனது அனுபவத்தைக் காட்டியது. பின் அவன் காலனிக்குள் சென்று விட்டான். நான் சாப்பிட்டு விட்டு நண்பனைப் பார்க்க சென்று விட்டேன்.<br />
<br />
மதியம் இரண்டரை மணியிருக்கும். நண்பன் வீட்டிலிருந்து சாப்பிட வந்தேன். வெளியில் பேப்பர்க்காரன் நின்று கொண்டிருந்தான். ”என்னண்ணே அம்மா எடுத்துக் கொடுத்திட்டாங்களா” எனக் கேட்டேன். ”இல்ல அம்மா சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. வந்து எடுத்து தர்றென்னு சொல்லியிருக்காங்க” எனச் சொன்னான். எப்படி வெளியில் ஒருவரை நிற்க வைத்துக்கொண்டு அம்மாவால் சாப்பிட முடிகிறதென்று நினைத்ததை உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன். ”நான் சாப்பிட ஆரம்பிச்சப்புறம் தான் அவன் வந்தான். சாப்பிட்டுட்டு எடுத்து தர்றேன்னு சொல்லியிருக்கேன்” என்று அம்மா சொன்னாள். “சரி பழைய பேப்பர் எதுன்னு சொல்லு நான் எடுத்து கொடுக்கிறேன்னு” சொன்னேன். அதற்குள்ளாக வெளியில் சென்றிருந்த அப்பாவும் வந்து சேர்ந்தார். இருவருமாக பழைய பேப்பர் கட்டுக்களை எடுத்து போட்டோம். அதற்குள்ளாக அம்மா ”விகடன், மங்கையர் மலர் புக்கெல்லாம் போட வேண்டாம் டா. இன்னும் அதுல தேவையானது நிறைய எடுக்க வேண்டியிருக்கு” என்று சொன்னாள். ”சரிம்மா” என்று சொல்லிவிட்டு பேப்பர்கட்டுக்களை மட்டும் போட்டோம். பேப்பர்க்காரன் முதலில் ஒரு கிலோ எடைக்கல்லை வைத்து பேப்பர்களை அளந்தான். பின்னர் அளந்த பேப்பர்களையும் எடைக்கல்லையும் தராசில் ஒரு தட்டில் வைத்து, மிச்ச பேப்பர்களை அளந்தான். மாடியில் பேழையில் கொஞ்சம் பேப்பர் இருப்பதாக சொல்லவே மாடியிலிருந்து அந்த பேப்பர்களை எடுத்து வந்தேன். அவை எல்லாம் மிகவும் பழைய ஆங்கில பேப்பர்கள். எடைபோட்டதில் 12 கிலோ 300 கிராம் தமிழ் பேப்பரும், 2 கிலோ 100 கிராம் ஆங்கில பேப்பரும் இருந்தது. அப்பா பழைய ப்ளாஸ்டிக் பொருட்கள் போடப்பட்டிருந்த அட்டை டப்பாவை எடுத்துக் கொடுத்தார். அவை இரண்டு கிலோ இருந்தது. மொத்தம் 130 ரூபாய் வருவதாக பேப்பர்க்காரன் சொன்னான். அப்பா பேசி 140ஆக வாங்கிக் கொண்டார். ”புக்கையெல்லாம் எடுத்துட்டுப் போயிரலாம்னு காசெல்லாம் எடுத்துட்டு வந்தேன்” என்று பேப்பர்க்காரன் சொன்னான். ”ரெண்டு வாரம் கழிச்சு வாங்கண்ணே. அம்மா அதுக்குள்ள வேணுங்கிறது கிழிச்சி எடுத்து வச்சுக்குவாங்க” என்று நான் சொன்னேன். “சரி தம்பி. வர்றேன்” என சேகரமான 14 கிலோவை சாக்குப்பையில் நிரப்பிக்கொண்டு கிளம்பினான் பேப்பர்க்காரன். “சாப்பிட்டாச்சாண்ணே! எனக் கேட்டேன். “போய் தான் சாப்பிடணும் தம்பி. வழக்கமா ரெண்டு ரெண்டரை மணிக்கு சாப்பாடுவேன். <br />
உங்க வீட்ல இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு. அரை மணி நேரத்தில போயிருவேன். வரட்டா” என சொல்லி கிளம்பி விட்டான் பேப்பர்க்காரன். இப்பொழுது கவனித்தேன். சாக்கு கிட்டதட்ட முழுவதுமாக நிரம்பியிருந்தது. அம்மா சாப்பிட்டு முடித்து வெளியே வந்திருந்தாள். தெரு முடிவில் ஐஸ் வண்டிக்காரன் மணி அடித்துக்கொண்டிருந்தான். ”அந்த காசுக்கு ஐஸ் வாங்கிருங்க” என்று அப்பாவிடம் சொன்னாள் அம்மா. நான் சாப்பிட வீட்டின் உள்ளே சென்றேன். அம்மா பாதுகாத்த புத்தகமொன்றின் முன்னட்டையில் ஒரு பெண்மணி சிரித்துக்கொண்டிருந்தார். பழைய பேப்பர் வைத்திருந்த இடம் வெறுமை படர்ந்து பழைய பேப்பர் சேகரித்து வைக்கத் தயாராகயிருந்தது.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-41420151661358261522011-04-18T11:42:00.001+05:302011-04-18T15:34:44.862+05:30விடைத்தாள்திருத்தப்பட்ட விடைத்தாள்கள்<br />
கொடுக்கப்படுகின்றன.<br />
<br />
”கலைவாணி” <br />
என்றழைக்கிறார்<br />
ஆசிரியர்.<br />
<br />
கோடிட்ட இடங்களை<br />
பூக்களால் நிரப்பியிருக்கிறாள்.<br />
<br />
இடப்புறம் இருக்கும் பட்டியலில் <br />
எல்லாவற்றையும்<br />
வலப்புறம் இருக்கும்<br />
எல்லாவற்றினுடனும்<br />
பொருளறிந்து பொருத்தியிருக்கிறாள்.<br />
<br />
சரியா தவறாவில்<br />
எல்லாமே சரியாய்<br />
இருக்கின்றன.<br />
<br />
உலகம் பற்றிய<br />
வினா ஒன்றுக்கு<br />
மூன்று வரிக்கு மிகாமல்<br />
தாளில் பாதியும்<br />
மேஜையில் பாதியும்<br />
யானை ஒன்றை வரைந்திருக்கிறாள்.<br />
<br />
மேஜையில் இருக்கும் யானை <br />
தன் மதிப்பெண்கள் அனைத்தையும்<br />
தின்று விட்டது தெரிந்ததும்<br />
சந்தோஷமடைகிறாள்.<br />
<br />
மேஜைக்காடுகளில்<br />
விலங்குகள் தின்னும் விலங்குகள் கூட<br />
மதிப்பெண்களை மட்டுமே<br />
தின்று கொண்டிருக்கின்றன.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-30327373607774486172011-04-11T17:01:00.001+05:302011-04-11T17:01:57.199+05:30தார் சாலைகள்எச்சில் பொட்டுக்களுடன்<br />
நெடுக கிடத்தப்பட்டிருக்கின்றன<br />
தார் சாலைகள்<br />
<br />
இரு பாகம் பிரித்து<br />
வெள்ளை நூல் கொண்டு<br />
சிவப்பு மண் மேல்<br />
கவனமாய் தைத்திருக்கிறார்கள்<br />
<br />
மஞ்சள் <br />
கோடு<br />
போக-வர<br />
வேலியிடுகிறது<br />
<br />
ஊர்திகளின்<br />
இடைவிடாத <br />
போக்குவரத்தில்<br />
ஊர்களை<br />
இணைத்து<br />
கருமையிழக்கின்றன<br />
<br />
சாவடிகளில்<br />
சுமைகளின்<br />
சந்தேகங்களில்<br />
சோதனையும்<br />
உண்டு<br />
<br />
முடிவின்றி<br />
நீண்டு கிடக்கின்றன<br />
எல்லைகள் தாண்டி<br />
வரிகள்<br />
வேறுபடுகின்றன<br />
சக்கரங்களுக்கேற்பGanesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-29471520946906495872011-04-07T15:07:00.005+05:302011-04-07T15:07:52.821+05:30அடையாளம்துர்கா மெஸ்ஸில் <br />
”DM” என்ற<br />
எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட<br />
எவர்சில்வர் தட்டுகளில்<br />
உண்டிருக்கிறேன்.<br />
<br />
ஜெயஸ்ரீ கல்யாண மஹாலில்<br />
பல வண்ணங்களில்<br />
JKM எண்களுடன் <br />
ப்ளாஸ்டிக் சேர்களை<br />
கண்டதுண்டு.<br />
<br />
சண்முகா டாக்கீஸில்<br />
துளையிடப்பட்டு<br />
இரும்புச் சங்கிலியில் <br />
கட்டப்பட்டிருக்கிறது <br />
காலி தண்ணீர் டம்ளர்!<br />
<br />
நண்பன் பரிசளித்த<br />
காப்பிக் குவளையொன்றில்<br />
சிரித்தவாறு<br />
அச்சிடப்பட்டிருக்கிறேன்<br />
நான்.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6537565.post-11619121640924568592011-02-09T12:11:00.002+05:302011-02-09T12:11:53.344+05:30வீடுகள்மேல வீட்டுக்கு<br />
கீழ வீடாகவும்<br />
கீழ வீட்டிற்கு<br />
மேல வீடாகவும்<br />
இருக்கிறது வீடு.<br />
<br />
அஞ்சல்களுக்காகவும்<br />
வருபவர்களுக்காகவும்<br />
தேடுபவர்களுக்காகவும்<br />
வீட்டிற்கு<br />
விலாசம் இருக்கிறது.<br />
<br />
தூளிகளுக்கான <br />
கொக்கிகளுடன்<br />
வெள்ளையடிக்கப்பட்ட<br />
உட்கூரையும் உண்டு.<br />
<br />
ஒளியை மறைத்திருக்கும்<br />
வீட்டின் <br />
திறந்திருக்கும் ஜன்னல்களின் வழி<br />
ஊடுறுவும் ஒளி<br />
<br />
தரையின் <br />
சதுர அடி கற்களில்<br />
பதிந்திருக்கின்றன<br />
நடந்த கால்களும்<br />
அவை நகர்ந்த தூரமும்<br />
<br />
வாடகை வீடுகளில்<br />
ஆணியடிக்கப்படாத<br />
வெற்று சுவர்களில் <br />
புகைப்படமாக இருக்கிறார்கள்<br />
வீட்டுக்குச் சொந்தக்காரர்கள்.<br />
ஆட்கள் இல்லாத<br />
வீடுகள் தாளிடப்பட்டனவாக<br />
இருக்கின்றன.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6537565.post-19697975984349446982011-02-04T11:56:00.001+05:302011-02-04T11:56:56.683+05:30தொலைக்கத் தவறியவையாரோ துப்பிவிட்டு<br />
போயிருந்த பபுள் கம்<br />
கூடவே வரும்<br />
விளக்குக் கம்பத் <br />
தேய்ப்பிற்குப் பிறகும்.<br />
<br />
மட்காப்பிலோ, சக்கர ஆரத்திலோ <br />
சிக்கிக் கொண்டு<br />
ஓட்ட வேகத்தில் <br />
சத்தமிட்டுக்கொண்டிருக்கும் <br />
ஒரு பாலித்தீன் பை.<br />
<br />
சுகாதார ஆசை<br />
கவனம் பெற்று<br />
நூலாம்படை நீக்குகையில்<br />
பரணில் தட்டுப்படலாம்<br />
ஒரு பழைய நாணயம்.<br />
<br />
வெளிப்புறம் வழிந்த <br />
எண்ணெய்த் துளிகள்<br />
ஒவ்வொரு இருத்தலிலும்<br />
தெரியப்படுத்தலாம்<br />
புட்டியின் அடிபிம்பத்தை.<br />
<br />
தூசி படர்ந்த <br />
வாகன கண்ணாடியில்<br />
என்றேனும் எழுதப்பட்டிருக்கும் <br />
ஒரு பெயர்.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6537565.post-28509981503545533932011-01-31T11:50:00.000+05:302011-01-31T11:50:27.785+05:30மாதிரிகள்அமர்ந்த மாதிரி <br />
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்<br />
நகரும் மாதிரிகளில்<br />
<br />
நிஜம் மாதிரி சுவர்ச் சித்திரங்ளில்<br />
பறந்து கொண்டேயிருக்கின்றன <br />
பறவை மாதிரிகள்.<br />
<br />
முன் நிற்பது மாதிரி <br />
என்னையே காட்டிக்கொண்டிருக்கிறது<br />
கண் மாதிரி கண்ணாடி.<br />
<br />
அந்த மாதிரி இந்த மாதிரி எந்த மாதிரியும்<br />
இல்லாமல் இருந்தவை<br />
முன் மாதிரியே ஆகிவிட்டன.<br />
<br />
புரியாத மாதிரி<br />
இருப்பவை எல்லாம் <br />
ஒரு மாதிரி ஆகிவிடுகின்றன.<br />
<br />
உண்மையாய் இருப்பது மாதிரியே<br />
இருந்து கொண்டிருக்கின்றன மாதிரிகள்.Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6537565.post-17845424353392688552010-11-30T14:58:00.001+05:302010-11-30T14:58:06.227+05:30பயணம்பேரிரைச்சலுடன்<br />
மூச்சிறைத்தபடி <br />
சென்று கொண்டிருக்கிறது<br />
ரயில் வண்டி<br />
கடக்கும் இடங்களின்<br />
வாசனையைத் <br />
தன்னுள் நிரைத்தபடி<br />
<br />
கட்டணத்திற்கேற்ப<br />
வகுப்புகளும்<br />
வகுப்புகளுக்கேற்ற<br />
வசதிகளும் உண்டு<br />
<br />
முன்பதிவு <br />
செய்யப்படாத பெட்டியில்<br />
வாசற்படியில் அமர்ந்தபடி<br />
வந்து விழும்<br />
ஜன்னல் வழி<br />
எச்சில்களை குப்பைகளை<br />
பொருட்படுத்தாமல்<br />
வண்டிச்சக்கரத்தின்<br />
தண்டவாள பதிப்புகளை<br />
எண்ணிக் கொண்டிருக்கிறான்<br />
கணக்கின் பயனறிந்த<br />
ஒருவன்Ganesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6537565.post-57462445837686787982010-11-30T14:25:00.000+05:302010-11-30T14:25:44.346+05:30ஒரு கணம்கவண் குறிகளுக்கோ <br />
எய்த அம்புகளுக்கோ<br />
முறிந்த விற்களுக்கோ<br />
தப்பித்த ஆப்பிள் நீ<br />
<br />
உன் கண் சிமிட்டலில்<br />
கிறங்கிய விழிகளில்<br />
பிதுங்கிய இதழ்களில்<br />
முனகல் மொழிகளில்<br />
ஒரு துளியென தான்<br />
உன்னில் புதைகிறேன்<br />
உன்னை நிரைக்க<br />
<br />
பிறக்கக் கூடும்<br />
ஒரு ஆதாமோ, ஏவாளோ<br />
அல்லது <br />
ஒரு ஆப்பிளோGanesh Gopalasubramanianhttp://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com1