Tuesday, May 15, 2012

கிணறைத் தாண்டிய தவளை


நேற்றிரவு ஆசாமி ஒருவன்
கிணறைத் தாண்டிய தவளைக் கதையை
சொல்லிச் சென்றான்
இரவில் ஒரு புறம் குதித்து
விடியலில் மறுபுறம் போய் விழுந்தது என

சாத்தியமில்லை என்றான் சாமானியன்
கிணறு எங்கிருந்தது என கேட்டான் மற்றொருவன்
ஆரம் பற்றிய கேள்வியோடு இன்னொருவன்
அது புனிதத் தவளை என்றனர் சிலர்
தவளையின் சக்தி பற்றி ஆராய்ந்தனர் சிலர்
அந்தத் தவளையைப்
பார்த்ததாகச் சொன்னது வவ்வால்
ஆசாமியிடமே கேட்டுவிடுவதென முடிவெடுத்தனர்
அப்பொழுது விடிந்திருந்தது.