Monday, April 11, 2011

தார் சாலைகள்

எச்சில் பொட்டுக்களுடன்
நெடுக கிடத்தப்பட்டிருக்கின்றன
தார் சாலைகள்

இரு பாகம் பிரித்து
வெள்ளை நூல் கொண்டு
சிவப்பு மண் மேல்
கவனமாய் தைத்திருக்கிறார்கள்

மஞ்சள்
கோடு
போக-வர
வேலியிடுகிறது

ஊர்திகளின்
இடைவிடாத
போக்குவரத்தில்
ஊர்களை
இணைத்து
கருமையிழக்கின்றன

சாவடிகளில்
சுமைகளின்
சந்தேகங்களில்
சோதனையும்
உண்டு

முடிவின்றி
நீண்டு கிடக்கின்றன
எல்லைகள் தாண்டி
வரிகள்
வேறுபடுகின்றன
சக்கரங்களுக்கேற்ப

No comments: