Tuesday, June 24, 2008

நாம்

உனக்கு என்னைத் தெரியாது
உனக்கு உன்னையும் தெரியாது

எனக்கு உன்னை தெரியாது
எனக்கு என்னையும் தெரியாது

நான் உனக்கு தெரிந்தால் சொல்
மறைகிறேன்

நீ எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்
தொலைந்துவிடு

நீயும் நானும் இருக்கையில்
அது எப்படி இருக்க முடியும்

நமக்கு நம்மை தெரிய வேண்டுமெனில்
நாம் அறியாத நாம்
இருந்து தான் ஆகவேண்டும்

No comments: