Tuesday, November 30, 2010

ஒரு கணம்

கவண் குறிகளுக்கோ
எய்த அம்புகளுக்கோ
முறிந்த விற்களுக்கோ
தப்பித்த ஆப்பிள் நீ

உன் கண் சிமிட்டலில்
கிறங்கிய விழிகளில்
பிதுங்கிய இதழ்களில்
முனகல் மொழிகளில்
ஒரு துளியென தான்
உன்னில் புதைகிறேன்
உன்னை நிரைக்க

பிறக்கக் கூடும்
ஒரு ஆதாமோ, ஏவாளோ
அல்லது
ஒரு ஆப்பிளோ

1 comment:

பத்மா said...

romba arumai ...aha ..liked it