Tuesday, June 24, 2008

கண்ணாடி

சில நேரம் குழித்துவிட்டும்
சில நேரம் குவித்துவிட்டும்
எனக்கும் என் கண்ணாடிக்குமான உறவு
மட்டும் எந்நேரமும் நிகழ்கிறது

ஓடும் வண்டிச்சக்கரமும்
பறக்கும் வானூர்தியும்
மிதக்கும் நட்சத்திரங்களும்
கண்ணாடியில் தான் விழுகின்றன

வண்டிச்சக்கரம் ஓடவும்
வானூர்தி பறக்கவும்
நட்சத்திரம் மிதக்கவும்
முடிவது கண்ணாடியால் தான்

நான் உறங்கையில் அது
மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது
எனக்கும் என் கண்ணுக்கும்
தெரியாமல்

கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது

5 comments:

Mohandoss said...

வாங்கய்யா வாங்க.

இரண்டு வருஷம் கழிச்சு வருகையா?

நட்சத்திரப் பதிவுகளோட எஸ்கேப் ஆனீங்கன்னு நினைக்கிறேன்.

வெல்கம் பேக்.

கோவி.கண்ணன் said...

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாள் சென்று மீண்டும் எழுத வந்திருகிறீர்கள்.

வருக வருக !

ILA (a) இளா said...

ஆஹா வந்தாச்சா...Welcome back..

ஆயில்யன் said...

//கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது//

நல்லா இருக்கு :)

மீண்டும் பதிவுலகில்...!
வரவேற்பில் மகிழ்கிறேன் :)

Nivedhida Devi said...

//கண்ணாடியின் இருப்பிலும்
இல்லாமையிலும் தான்
நான் இருக்கிறேன் என்பது மட்டும்
கண்ணாடிக்கு தெரியாது//


அண்ணா நம்மன்னு சேத்துக்கோங்க :) :) :) :) அருமை அண்ணா :) :) :)