Tuesday, May 26, 2009

தொலையாத முகம்

ஒரு காகிதத்தின் வழியாகத்தான்
வெளிப்படுகிறது அதுவும்
அழுந்திய கணம் முதல்
முயன்று கொண்டிருக்கிறது
முடிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கும் முகத்தைக் காட்ட
கண்ணாடி பார்க்காத கைப்பக்குவம்
முதல் நகர்விலேயே ரத்தக்கீறலாக்க
காரியம் முடிந்து பார்த்தால்
சில கோடுகளின் நடுவில்
தெரிகிறது தொலையாத முகம்

(வா. மணியின் ஒரு கவிதையைத் தழுவி எழுதியது)

No comments: