Tuesday, May 26, 2009

முதல் கவிதை

முதன்முதலாய் எழுத நினைத்து
பேனாவில் விரல் கோர்த்து
நினைத்தவைகளில் விலக்கியவை பல
என் பயன்பாட்டுக்காய்
நொடி பொழுதுகளை
வீணடிக்கும் காலமகன்,
முரண்களில் முரண்படும்
அந்த ஒற்றுமை,
விடியல் வரை
உறங்க மறுக்கும் இரவு,
புலனுறுத்தல், பிம்பங்கள்
என நீண்டது விலக்கப் பட்டியல்.
முதலெழுத்துக்காய் மூச்சிறைத்து
முயற்சி தளர்த்தி
முடித்துவிட நினைத்தபோது
கைவந்தது
நண்பன் கொடுத்த வெள்ளைத்தாள்.

No comments: