Thursday, August 11, 2011

ஒரு புத்தகம் - அன்பளிப்பு

பக்கங்களாக
நிறைந்திருக்கிறது புத்தகம்
என்றோ யாரோ
பிடித்த வரிகளை
கோடிட்டிருக்கிறார்கள்

படரும் வேட்கையில்
ஏதோவொரு பரப்பொன்றில்
சிதறிய திரவம்
படித்த கடைசி வரிகளின்
நினைவிற்க்காய்
கவிழ்க்கப்பட்ட பக்கத்தில்
வண்ணப்பூச்சு எழுத்தாய்

தலைப்பு
எழுதியவர்
தெரியப்படுத்தும்
முதல் பக்கத்தில்
கோடுகளோ
வண்ணப்பூச்சுக்களோ
பார்த்ததில்லை
கையெழுத்துக்களில்
அன்பளிப்பு என்று பார்க்கையில்
மறுமுறை வாசிக்கிறேன்
அன்பளிப்பென்றே
உறுதி செய்ய!

No comments: