Showing posts with label ஓட்டப்பந்தயம். Show all posts
Showing posts with label ஓட்டப்பந்தயம். Show all posts

Friday, August 05, 2011

ஆறும் அது ஆழமில்ல



தண்ணியில கோலம் போடு,
ஆடி காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்டை கட்டு,
அந்தரத்தில் தோட்டம் பொடு,
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் பொடு,
அத்தனையும் நடக்குமய்யா ஆச வச்ச கிடைக்குமய்யா,
ஆனா
கிடைக்காது,
நீ ஆசை வைக்கும் மாது...

’ம்ம்ம்ம்’ பெண் குரல்களில் இசையின்றி துவங்கும் பாடல், தாளவாத்தியங்கள் சேர நாதஸ்வரத்துடன் இணைந்து, பின் ராஜா சார் குரலில் ஆர்ப்பரிக்கும். ”On your mark! Get set! Go!"ன்னு ஒரு பந்தயத்துக்கான துவக்கம் மாதிரியே இருக்கும். தாள வாத்தியத்துடன் சேரும் நாதஸ்வரம் ஒரு சில நொடிகளுக்குப் பின் நின்றுவிடும். தாள வாத்தியம் மட்டும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே இருக்கும். அந்த சில நொடிகள் வீரர்கள் ஓடத் துவங்கப் போவதற்கான கட்டியம். முதல் முறை பாடுகையில் ”ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல” என்ற இரு வரிகளுக்கு இடையில் ஒரு கிதார் ஃபில்லர் இருக்கும். டேய் இந்தா நான் ஓட ஆரம்பிச்சுட்டேன் நீயும் ஓடறியான்னு கேட்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் பாடல், குரலுக்கும், இசைக்கும், ரசனைக்குமான பந்தயம். அதே போல் ”ஆனா கிடைக்காது”ல் ’ஆனா’வுக்கு பின்னும் ’கிடைக்காது’க்குப்பின்னும் வரும் புல்லாங்குழல் ஃபில்லர் ஏன் என்பது ராஜாவுக்குத்தான் தெரியும். இந்த மாதிரி சின்ன சின்ன ஃபில்லர்கள் ராஜாவோட பெரிய பலம்.

எனக்கு சரியா இசை நுணுக்கம் தெரியாது. ஆனா ‘ஆனா’வும், ‘கிடைக்காது’வும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கள் ஏழு சுரங்களில் கீழிருந்து மேல் சுரங்களுக்கான பெரிய தாவலாக இருக்கலாம். குரலில் (ஏற்ற இறக்கமில்லாமல்) இப்படியான தாவல்கள் தொடர்ந்து வருவதால் கேட்பவர்களுக்கு தினவேற்படலாம். அதனால் இந்த மாதிரி ஃபில்லர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். குறிப்பாக புல்லாங்குழல், வயலின், பியானோ, கிதார் ஃபில்லர்கள் ராஜா சாரின் நுண்திறமை. நிறைய பாடல்களில் கேட்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் ராஜா சார் வரிகளை பாடி முடிப்பது அழகு... எப்படி சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்க வேண்டுமோ அப்படியே சில பாடல் வரிகள் இசையழகுக்காக நீடிக்காமல் நிறுத்தப் படவும் வேண்டும். ”கோலம் போடு”, “தீபம் ஏத்து”ன்னு சட்டென முடிப்பதும்... ”கோட்டை கட்டுஉ உ உ உ”ன்னு நீடிப்பதும் அழகு.