Monday, April 04, 2005

எனக்கோர் கனவு வேண்டும்

நீண்ட நாளாய் கனவென்பது
எனக்கோர் மனக்குறை.
இந்நாளில் இறைவனிடம் நான்
வைக்கும் கோரிக்கைகளில்
கனவும் அடங்கிவிட்டது.
துயில்கையில் நானொரு
மூச்சுவிடும் பிணமாதலால்
இன்றுவரை எனக்கு கனவு
கிட்டாத ஒன்று

கனவென்பது கிடைக்காத ஒன்றையும்
கிடைக்கச் செய்யுமாம்.
அப்படியென்றால் எனக்கு
கனவென்பதே இன்றுவரை
கனவாய் இருக்கிறது
நினைவில் காணும் கனவுபற்றி
எனக்கு கனவில்லை
எனக்கு கனவென்பது
கனவாய் வேண்டும்

அப்துல் கலாமின் நம்பிக்கை
பொறாமையில்லா உலகம்
கவலையில்லா மனிதர்கள்
வேறுபாடில்லா வாழ்க்கை
வேதனையில்லா சூழ்நிலை
எல்லாவற்றையும் நானும்
காண வேண்டும் -
ஒரு கனவிலாவது

No comments: