Wednesday, May 25, 2005

முப்பது நொடிகளில் உங்களை விற்கலாம்

என்னது இது வம்பா போச்சு. நான் என்னை எதுக்கு விக்கணும்? (அப்படி வித்தாலும் யாரு வாங்குவா?). எனக்கும் இதே கேள்விகள் தான் மனதில் எழுந்தன. இன்றைய HINDU OPPORTUNITIES_ல், Sell yourself in 30 secondsனு எழுதியிருக்கிறார்கள். எதைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் நேர்முகத் தேர்வில் நம்மை நாமே எப்படி வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் அதுவும் கிடைக்கும் சில மணித்துளிகளில் என்பன போன்ற அட்வைஸ்கள் இருந்தன. அதை ஏன் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. நேர்முகத் தேர்வு என்றாலே ஆட்களை விலைக்கு வாங்கும் விஷயமாகிவிட்டது. அதுவும் சாஃப்ட்வேர் துறையில் வேலை என்றால் இன்றைய கால கட்டத்தில் ஒருவனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள்.

BOOK FAIR போல இப்பொழுது JOB FAIRகளூம் நடத்தப்படுகின்றன. ஆதலால் ஒவ்வொருவருக்கும் நேர்முகத்தேர்வில் கிடைக்கும் கால அவகாசம் மிகக் குறைவே. இந்த கால அவகாசத்தில் தன் திறமையை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் மிக மிக குறைவே. அதனால் தான் மைக்ரோசாஃப்ட், ஆராக்கிள் போன்ற நிறுவனங்கள் இது போன்ற JOB FAIRகளில் பங்கேற்பதில்லை. நிறுவனங்களில் நிலைப்பாடு இப்படியிருக்க "உங்களை 30 நொடிகளில் விற்பது எப்படி?" போன்ற செய்திகள் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியவை. பட்டதாரிகள் சம்பாதிக்க மட்டுமே வருகிறார்களேத் தவிர அவர்களை அவர்களே விற்க வரவில்லை. இதுபோன்ற செய்திகள் தவறான முன்னுதாரணமாக மாறிவிட வாய்ப்பும் இருக்கிறது. INTERVIEW TIPS என்று எழுதியிருக்கலாம். அது கவர்ச்சிகரமாக இல்லை போலும். என்ன செய்ய எல்லாம் கலிகாலம்.

No comments: