Tuesday, April 20, 2010

சொற்களாலான கடிதம்

நிறையவே நினைத்தும்
சேர்த்தும் மடித்தும்
ஒட்டியும்
வந்து சேர்வனவற்றுள்
கிழிக்கப்படும் முன்
கிஞ்சித்து அர்த்தமுணர்த்தினாலும்
ஒட்டியதும் மடித்ததும்
சேர்த்ததும் நினைத்ததும்
நிறையவே
இருந்து விடுகின்றன.

No comments: