Wednesday, June 02, 2010

புகைப்படப் பெண்

முந்தானைத் தூசியைத்
தட்டி விட்டேன்
புருவ வளைவினைத்
தடவிப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
இடைவரை இறங்கிய
பார்வையில் காமமில்லை
அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்
புகைப்படப் பெண்
சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

1 comment:

லேகா said...

கவிதை அழகு !!