Monday, May 31, 2010

ஆழம்

கருத்த நதிதன்னில் வெளிச்சம் பரப்பி
மிதந்து கோண்டிருந்த நிலவினை
மறைத்துக் கொண்டிருந்தது
கரைமரமுதிர்த்த சருகு.
கல்லெறிந்து சருகுநகர்த்தேன்
நிலவும் கலங்கியது.
மூழ்கிய கல்லது
ஆழம் உணர்த்தவே
இடம் பெயர்ந்தேன்.
நிலவு சருகினை
மறைக்கலாயிற்று.

No comments: