Thursday, June 24, 2010

நான் நீயாய்

எப்பொழுதோ
கவனம்
என்ற சொல்தாங்கிய
கடிதத்தில்
அக்கறையாய் இருந்தேன்

நேற்று எதிர்பார்ப்பின்
துகள்கள் பதுங்கிய
சாலையில்
மின்விளக்கின் ஆறுதலாய்

பின்
இறுதி வடிவமென்று
காதணி அலைதலிலும்
கைக்குட்டை ஈரத்திலும்
வெறுப்பாய்

எப்பொழுதேனும்
பின்புறம் தெரியாத
மேகத்தின்
அக்கறை தெரியாத
கடற்காலத்தில்
நான் நீயாய்.

1 comment:

Karthikeyan said...

யார் அந்த "நீ"?