Thursday, June 03, 2010

நனைதல்

துணைக்கரம் பிடித்து
கால் நனைத்திருக்கிறேன்
மணல் சேகரிப்பின்
புறக்கணிப்பிற்கு
அரைக்கால் சட்டையைத்
தீர்வாக்கியிருக்கிறேன்
கால் நனைத்தவரை
ஈரம் மட்டுமே
மீண்டிருந்தது.
வளர்ச்சி விகிதங்களால்
நீந்தத் தெரியுமென்பதால்
முழுவதும் நனையலாம்.
ஆனாலும்
கடலின் ஆழமும்
நீரின் உவர்ப்பும்
உவப்பானதாயில்லை.

1 comment:

Karthikeyan said...

மீறி நீலவானின் தொடுதலையும்.. அலைகளின் வருடலையும் ரசிக்கவே செய்கிறது மனம்..