Friday, April 01, 2005

நெஞ்சத்து சுனாமி

சாலையில் அடிபட்டு
கிடக்கும் நாயினை
பார்த்தும் பார்க்காமல்
செல்லும் பொழுதும்

பேரூந்து நிறுத்தத்தில்
குழந்தையுடன் பிச்சைக்
கேட்கும் பெண்மணியை
துரத்தும் பொழுதும்

வீட்டுத் தோட்டத்தின்
மரத்திலிருக்கும் எட்டாத
குருவியின் கூட்டை
கலைக்கும் பொழுதும்

சமையலறையில் சரிபார்த்து
சாமர்த்தியமாய்
எலிப்பொறி ஒன்றை
வைக்கும் பொழுதும்

நெஞ்சத்தில் ஏற்படும்
அதிர்வு கண்களில்
மட்டும் சுனாமியை
வரவழைத்ததேயில்லை

1 comment:

Thangamani said...

உங்கள் குழந்தைகள் என்ற பதிவை திசைகளில் பார்த்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! நன்றி!