Thursday, April 28, 2005

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

பாரதியார் பாடல்கள் என்றாலே திரைத்துறையில் ஒரு வரவேற்பு உண்டு. பாருக்குள்ளே நல்ல நாடு, நின்னையே ரதியென்று, காக்கைச் சிறகினிலே, நிற்பதுவே என இந்த பட்டியல் மிகப் பெரியது. ஆனால் எண்பதுகளுக்குப்பிறகு பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் ஒன்றும் திரைப்படங்களில் மலரவில்லை ("பாரதி" திரைப்படத்தைத் தவிர்த்து). ஒன்றிரண்டு பாடல்கள் "நல்லதோர் வீணை செய்தே" (மறுபடியும்), "சுட்டும் விழிச் சுடர்தான்" (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) அத்திப் பூத்தாற் போல வந்தாலும், பாரதியின் தேச பக்தி பாடல்கள் திரைத்துறையைப் பொறுத்தவரை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவே தோன்றியது. (மேற்கூறிய விவரங்கள் என்னுடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டவை)

இதற்கு விதிவிலக்காக வெளிவரவிருக்கும் "சதுரங்கம்" திரைப்படத்தில் பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" பாடல் இடம் பெற்றுள்ளது. சதுரங்கம் திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து மாதங்கள் இருப்பினும் இன்று தான் கேட்க முடிந்தது. இந்தப் பாடலுக்கு அழகாக இசையமைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது, முக்கியமாக பாரதியின் வரிகள் செம்மையாக உச்சரிக்கப்பட்டுள்ளன. பாடியவர் திரு.மாணிக்க விநாயகமாக இருக்கலாம் என நினைக்கிறேன். நல்ல வேளையாக ஒரு தமிழர் கணீர் குரலில் பாடியிருக்கிறார். ("பர்வாயில்லை" போன்று தமிழ்க் கொலை செய்யவில்லை, பாரதி தப்பித்தான்).

எவ்வளவுதான் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் பாடல் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். எனினும் ஒரு நல்ல முயற்சிக்கு பாராட்டு என்பது அவசியம். கேட்டுவிட்டு பின்னூட்டம் இடுங்கள்.

1 comment:

ஒரு பொடிச்சி said...

enakkum entha padal (sathurangam) mikavum pidiththirunthathu!
nalla padal.