Sunday, November 22, 2009

நான் உறங்கப் போகிறேன்

விட்டம் வெறித்த கண்களிலிருந்து
பதுங்கி விழுகிறது தண்ணீர்த் துளி

தண்ணீர்த் துளிகளில் அமைதியாக
நகர்கிறது ராட்சத பல்லி

பல்லி நகரும் சுவரும் ஓசையின்றி
நின்று கொண்டிருக்கிறது

நிற்கும் சுவரில்
கவிதை பாடுகின்றன மின்விசிறிகள்

முடிகிறது இந்த விஸ்வரூப தரிசனம்
நான் உறங்கப் போகிறேன்

No comments: