Wednesday, November 25, 2009

மின்வெட்டு

மேஜை புத்தகத்தை புரட்டிப்பார்க்கிறது
சுவர் விசிறி

ஆப்பிள் தோட்டத்து வேலி முள்ளாய்
கணத்த ஒரு பக்கம்
கைவலி கண்ட கிழவியாக
ஒரு முனகலுடன் திருப்பப்படுகிறது

கனவற்றுப் போன தூக்கமாய்
பிணமாகிய மொழியின் எழுத்துக்களைத் தேடி
விடைதெரியா பரீட்சை மாணவனாய்
நெளிகின்றன நீள் ரெக்கைகள்

உதட்டு சாயம் மறைக்கும் முத்தங்களாய்
சில வண்ணப் படங்கள்
வெடித்து சிதறும் நீர்த்துளியாய்
நிறம் பிரிக்கப்படுகின்றன

புத்தகம் விசிறியாயும்
விசிறி புத்தகமாயும் உருமாருகின்றன
சாரல் மழையில்
மின்வெட்டு செயலாகும் பொழுது

No comments: