Monday, November 23, 2009

மேகம் மட்டும் !!

எனது இரண்டாம் காலை
அந்த வானத்தின் மேல் வைக்கலானேன்

ஒரு மரத்தில் மஞ்சள் நட்சத்திரம்
காய்த்துக் கொண்டிருந்தது

தலைக்கு மேலே பூமி
சிவப்பாகத் தெரிந்தது

வியாழனில் இருக்கும் மாமா
கடிதம் அனுப்பியிருந்தார்

எனக்கும் பூமிக்கும் இடையில்
மேகம் மட்டும் மிச்சமிருந்தது

No comments: