Saturday, January 02, 2010

புதுப்போர்வை

சென்ற புத்தாண்டுக்கு
வாங்கிய போர்வையில்
நிறைய மாற்றமிருந்தது.
முதல் மடிப்பிற்கான
தடம் தெரியாமல்
உபயோகப்படுத்தலின்
தடயமாக மிகக்
கசங்கியிருந்தது.
பத்துமுறையாவது
அடித்து துவைக்கப்பட்டிருந்ததில்
மணமிழந்து, சாயமிழந்து
கொஞ்சம் கந்தலாகியிருந்தது.
”புதுசு” என்று
இனி அதனை
கூறமுடியாதெனினும்
முதல் முறை
கை கால் போர்த்துகையில்
இருந்த அந்நியம் இல்லாமல்
நிறையவே பழகியிருந்தது.

No comments: