Monday, January 18, 2010

இருளின் ஜ்வாலைகள்

இருட்டின் அடியாளாய்
நுழைகிறது புயல் காற்று
மின்வெட்டின் நீளம்
படர்ந்த இரவில்.

புயல்காற்றின் தீக்குச்சி ஒன்று
வெற்று அறையில்
ஒளி நிறைக்கும்
மெழுகுவர்த்தியைத் தீண்ட,
குச்சியின் வீச்சு ஓங்கிய
நொடிப்பொழுதுகளில்
மெல்ல அணைந்து
இருளுக்குள் நுழைகிறது
மெழுகுவர்த்தி.

பின் அணைத்த தீக்குச்சியும்
எரியும் மெழுகுவர்த்தியும்
இருளின் ஜ்வாலைகளில்
தெரிகின்றன.

No comments: