Monday, January 11, 2010

ஒரு பழம்

அம்மா அப்பாவைச்
சுற்றிய விநாயகனும்
மயிலில் உலகு
சுற்றிய முருகனும்
ஏழை அனாதைக்குச்
சொல்லவில்லை
என்ன செய்தால்
ஒரு பழம்
கிடைக்குமென்று.
நாரதர்கள் மட்டும் பழங்களுடன்
அலைந்துகொண்டிருக்கிறார்கள்!

No comments: