Wednesday, January 06, 2010

வேற்று மொழிக் கவிதையொன்று...

அந்தப் புத்தகத்திலிருக்கும் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

நீ
மரபுக்கவிதைகளின் வித்தகன்
அமாவாசை இரவின்
நிலவு ரசிகன்
மௌன மொழியில் தேர்ந்த
மேடைப்பேச்சுக்காரன்
சொல்லியல் பொருளியலில்
முதுகலை வரை பயின்றவன்
இருந்தும் அந்தக் கவிதையை
நீ படித்திருக்க வாய்ப்பில்லை

வேற்று மொழிக் கவிதையைப்
புரிந்துகொள்வதற்கான
சாத்தியக்கூறுகளை
உன் மொழிக்கான
இலக்கணம் இல்லாததாக்கியிருக்கிறது
அவ்வளவே!

No comments: