Sunday, November 22, 2009

புரிகிறது

கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஒருவன் வாசிக்கிறான்.
ஒருவன் சிரிக்கிறான்.
ஒருவன் வசிக்கிறான்.
பலர் பார்க்கிறார்கள்.
புரியாதவர்களில் சிலர் கேட்கிறார்கள்.
புரிந்தவர்களில் சிலர் சொல்கிறார்கள்.
பலருக்கும் ஒன்றும் புரிவதில்லை.
எவனுக்கு புரியும் எவனுக்கு புரியாது
என்பது எழுதியவனுக்கு மட்டுமே
புரிகிறது.

1 comment:

Bala said...

வாழ்த்துக்கள்..... உங்கள் எழுத்தின் ஆழத்தை ரசித்தேன்.