Wednesday, January 20, 2010

எழுத்து

முதன் முதலில் எழுதியது
பல்ப்பத்தால்.
கருப்பு பலகையில்
வெள்ளைச் சுண்ணாம்பு
தெரியும் என்பது மட்டுமே
அறிந்து கொண்டது.
என்ன எழுதினேன்
எனத் தெரியாது.

பிறகு பென்சிலால்.
எழுத்து திருத்தமடைந்ததாக
நம்பியதுண்டு.
எழுத்துப்பிழைகளுக்கு
அடி வாங்கிய ஞாபகமும்
இருக்கிறது.

பேனாவில் விரல் கோர்த்து
எழுதத்துவங்கிய நாட்களில்
முதல் ரேங்க் வாங்கியிருக்கிறேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து
கொண்டதும்
நினைவிலிருக்கிறது.

இப்பொழுது தட்டச்சும்
காலம்.
எழுதினேன் என
இனி கூற
முடியாதோ?

2 comments:

Manki said...

"A man paints with his brains and not with his hands," says Michelangelo :)

Ganesh Gopalasubramanian said...

மாங்கி :) ம்ம்! :)