Saturday, January 02, 2010

கவிதை எழுதுவது எளிதல்ல

ஒரு நாவல் எழுதுவது போல
கவிதை எழுதுவது எளிதல்ல.

கவிதை எழுதவதற்கான
குறிப்புகளைச் சொல்கிறேன் கேள்.

குறிப்பு #1: உன்னைத் தெரிந்தவர்களுக்கு நீ
தெரியாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு #2: தலையில் பாகையுடனும்
முறுக்கு மீசையுடன்
எதிர்படுபவனைக் கவனமாக தவிர்க்க வேண்டும்.

குறிப்பு #3: இரு கைகளிலும் எழுதத் தெரிந்திருந்தால்
நிறைய எழுதலாம்.

நானிப்படி சொல்லிக்கொண்டிருக்கும் சமயத்தில்
அகந்தை அல்லது அனுபவம்
தெரிகிறதாவெனப்பார்.

இப்பொழுது நீ நினைத்தது
எனக்கு எப்படி தெரிந்தது என்னும்
கேள்வி எழவேண்டும்.

இனிமேல் தெரியாமலிருக்க
உத்திகளை வளர்த்துக் கொள்.

ஒரே ஒரு எச்சரிக்கை!
சிவப்பு விளக்கு
கவிதைகள் மட்டும்
விரும்பத்தகாததாகவே இருக்கின்றன.

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் குறிப்பு முற்றிலும் நிஜம்...!

naga said...

loved the last few lines!!it was kinda twist to the whole mood of the lines above.nice..But somehow this doesn look like your way of writing.guess shud be impact of somebody u read?

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்