
அமெரிக்காவின் தாக்கம் இந்த அளவிற்கு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் காத்ரீனாவும், ரீட்டாவும் வந்து போன பிறகு இந்தியாவில் சில பெண் புயல்கள் வீச ஆரம்பித்திருக்கின்றன. நண்பன் ஒருவன் விளையாட்டாக சொன்னான் நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி கருப்பாயி, மாரியாத்தா, காளியாத்தான்னு (சும்மா பயமுறுத்தற மாதிரி) பேரு வைக்க ஆரம்பிக்க வேண்டியதுதானாம்.
இந்த காலத்தில் யாரும் தம் மகளுக்கு இப்படி பேரு வைக்கறதில்லைன்னு நினைக்கிறேன். கிராமத்துல கூட கொஞ்சம் மாடர்னா ஷ்ரேயா, ப்ரியான்னு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால தைரியமா கருப்பாயி, மாரியாத்தான்னு வைக்கலாம். ஆனா பாருங்க லேட்டஸ்ட்டா வந்த புயலுக்கு மாலான்னு பேரு வச்சதா கேள்விப்பட்டேன். இப்படி மாடர்ன்னா புயலுக்கு பேரு வச்சா சில பிரச்சனைகள் வரலாம்.
ஒரு உதாரணத்துக்கு கல்லூரியில மாலான்னு ஒரு பொண்ணு படிக்குதுன்னு வைங்க.... நம்ம கண்ணடிச்சான் பயலுகளும், விசிலடிச்சான் குஞ்சுகளும் புயல் வர்ற திசையில தான் உட்கார்ந்திட்டு இருப்பாங்க... அப்புறம் மாலா இவங்கள தாண்டி நடக்கும் போது.... "புயல் கரைய கடந்துடுச்சுப்பா"ன்னு வாய்ஜாலம் காட்டுவாங்க. உடனே நம்ம மாலா கோபப்படும் ஏதாவது திட்டும்..... அதற்கும் நம்ம மக்கள் சும்மா இருப்பாங்களா... மாட்டாங்க... உடனே "பாத்து மாப்ளே !! மாலா பயங்கரமா தாக்கும்.. 24 மணி நேரத்திற்கு யாரும் பக்கத்துல போகாதீங்கன்னு சன் நியூஸ்ல சொன்னாங்கன்னு" எவனாவது சொல்வான். தப்பித் தவறி புயலுக்கு ரேவதின்னு பேரு வச்சாங்கன்னு வச்சுக்கோங்க... "ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு" கோரஸ் பாடிருவாங்க....
அதுக்காக இப்படியெல்லாம் நீ பண்ணினியான்னு கேட்காதீங்க. சத்தியமா இப்படியெல்லாம் நடக்கக்கூடதுங்கிற நல்ல (??!!!) எண்ணத்துல தான் இத்த எழுதறேன். எதுக்குங்க இந்த பேர்சூட்டும் படலம். நம்மூருக்கு இது ஒத்துவரும்னு நினைக்கறீங்க .... எனக்கென்னவோ இது தேவையில்லைன்னு தோணுது...