Wednesday, December 30, 2009

காக்கா க(வி)தை!

மிட்டாய் பகிர்வுக்கு
என் ”கடி”யையும்
காரியக்கறப்பின் சாதுரியத்திற்கு
என் ”பிடி”யையும்
உருவகிக்கிறீர்கள்!
அப்பொழுதுகளிலும்
நான் பார்த்திராத பாட்டியிடம்
வடை களவாடியதாகச்
செய்தி வாசிக்கும் பொழுதும்
நான் வடிக்கும் கண்ணீரில்
உங்கள் நீலியும் முதலையும்
இருந்திருக்கலாம்!

முற்றம் வந்து வைத்துப்போகும்
பாட்டன் பூட்டன் சாதத்திற்காய்
என்னைக் கூவி அழைத்துப்போகிறீர்கள்!
அப்பொழுது நான் வடிக்கும் கண்ணீரில்
உங்களின் கடி, பிடி, முதலை, நீலி என
அனைத்தையும் சேர்த்து
உதிர்த்து விடுகிறேன்.

No comments: