Monday, December 28, 2009

ஒரு மழைக்காதல்

யாரும் வந்து பார்க்காத
ஜன்னல் கம்பிகளின் வழியே
நுழைகிறது ஒரு மழைத்துளி.

நுழைந்த மழைத்துளியின்
போக்கின் வழி உருவாகும்
ஒரு பேரலை
நீர் படாத இடம்நெடுக
ஈரம் பரப்புகிறது.

நிலைகள் நடுக்கி
திரைச்சீலைகளை
உதிர்க்கிறது பேரலையின்
கொடூரம்.

ஜன்னலுடைத்து வீடும்
பேரலையில் கரைகிறது.

என் வீடென்றும் ஜன்னலென்றும்
நினைத்திருந்த நான்
உறங்கிக்கொண்டிருக்கிறேன்.

No comments: