Wednesday, December 30, 2009

முதலெழுத்துக்கள்

அன்று பரிசு வழங்க
ஒலிபெருக்கியில் அழைத்த
அறிவிப்பாளன் மறந்துவிட்ட
பெயரின் முதலெழுத்துக்களை
மறக்காமல் எழுதுகிறேன்
அப்பாவிற்கான கடிதத்தில்!
முதலெழுத்துகளில் அம்மாவையும்
இணைத்துவிட்ட அப்பாவின்
பெருமிதத்தில் ஒரு எண்பது
சதவிகிதத்தைக் கடிதத்தில்
பசையாய் தடவியபடி.

No comments: