Thursday, March 31, 2005

காகிதங்களில் கவிதை

கற்பனையைக் கசக்கி
கவிதை எழுத நினைக்கையில்
கண்ணீர் சிந்தும் காகிதமும்
ஓர் அழகிய கவிதை தான்

கவிதை எழுதும் முயற்சிகளின்
தோல்விகளில் கிழித்து எறியப்பட்டு
சிதறிக் கிடக்கும் காகிதங்களும்
ஓர் அழகிய கவிதை தான்

எழுதிய கவிதைகள்
சிந்தாமலிருக்க மடித்து அவற்றை
எடுத்து செல்லும் காகிதங்களும்
ஓர் அழகிய கவிதை தான்

கொடுத்தனுப்பிய காதல் கவிதை
கிழிக்கப் படுகையில்
எழுதிய கவிதை துண்டானாலும்
தாங்கிய கவிதை இரண்டாகும்

இப்படியாக சாலைகளில்
குப்பைகளில் புத்தகங்களில்
எண்ணற்ற கவிதைகள்
காகிதங்களாய்

3 comments:

Vaa.Manikandan said...

நல்லாருக்கு பா! நிறைய எழுதுங்க! பல்வேறு தளங்களில்.

Anonymous said...

ஆமாம் நல்லாயிருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்.. "பல்வேறு தளங்களில்"

வினோபா

Ganesh Gopalasubramanian said...

நன்றி நண்பர்களே